இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

News image
ஆமதாபாத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 6:37 am

DIN

காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 41 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியதாவது, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். தீ விபத்தில் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனக் கூறினார்.

மேலும் மருத்துவமனை தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக கூடுதல் தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.