சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எல்லையில் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்புப் படை வீரர்கள்

இந்திய எல்லைகளில் தீபாவளிப் பண்டிகையை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை கொண்டாடினார்கள்.

News image
சிக்கிம் எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்
Updated On :14 நவம்பர் 2020, 8:18 pm

ANI

இந்திய எல்லைகளில் தீபாவளிப் பண்டிகையை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை கொண்டாடினார்கள்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அனைத்துத் தரப்பு மக்களாளும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், இந்திய-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் குல்தீப் சிங் கூறுகையில்,

“நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் எல்லையில் இருக்கும் வரை, நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

மேலும், இந்தோ-திபெத் எல்லை காவல்படை சார்பில் லடாக் மற்றும் சிக்கிமில் தீபாவளி கொண்டாடப்பட்டது

இதனிடையே ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.