போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது

முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது
Published on
Updated on
1 min read

லக்னௌ: உத்திர பிரதேச மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி அளித்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அம்பிகா சௌத்ரி மற்றும் அவரது மகன் ஆனந்த் சௌத்ரி இருவரையும் அம்மாநில காவல்துறை கைது செய்தனர்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள்  உபேந்திர திவாரி பற்றி தரக்குறைவாகவும்,  அவதூறாகவும் பேசிய காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், உபேந்திர திவாரியின் மகள் மற்றும் அவர்களது தாய் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதால், இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஆனந்த் சௌத்ரி கொலை மிரட்டல் விடுத்ததற்காக   அமைச்சர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் மேலும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com