தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மெத்தை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூர் இந்திரா நகரில் உள்ள மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள மெத்தை குடோனில் பரவிய தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர்.
Updated On :29 ஜூலை 2021, 4:11 am

DIN

திருப்பூர்: திருப்பூர் இந்திரா நகரில் உள்ள மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கபீர்குட்டி, இவர், திருப்பூர் இந்திரா நகரில் ராம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தை குடோன் நடத்தி வருகிறார். இவர் மொத்தமாக பஞ்சுகளை வாங்கி மெத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 

Story image

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள மெத்தை குடோனில் பரவிய தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர்.

இந்த நிலையில், மெத்தை குடோனில் பணியில் இருந்த கபீர்குட்டி மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை இரவு குடோனைப் பூட்டி விட்டு வீடு திரும்பினர். இதன் பிறகு குடோனைத் திறக்க  ஊழியர்கள் வியாழக்கிழமை காலை வந்துள்ளனர். அப்போது குடோனில் தீ பிடித்து இருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதன் பிறகு சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பரவிய தீயை அணைத்தனர். எனினும், இதில், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.