விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரிட்டனில் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி

பிரிட்டனில் 12 முதல் 15 வரை வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த  பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

News image

பிரிட்டனில் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி

Updated On :4 ஜூன் 2021, 1:05 pm

DIN

பிரிட்டனில் 12 முதல் 15 வரை வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த  பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் பிரிட்டனில் 12 முதல் 15 வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட இந்த வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகளுக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.