மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

News image

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

Updated On :10 ஜூன் 2021, 9:27 am

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். 

திருவள்ளூர் அருகே ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தறை சார்பில் திருநங்கைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடும்ப அட்டைகள் பெறாத 222 திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்து முதல் கட்டமாக ஆவடி பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் 50 பேருக்கு ரூ.2000 நிவாரண உதவித் தொகையை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து விலையில்லா தையல் இயந்திரங்கள், திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) இராஜராஜஸ்வரி, ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன், வட்டாட்சியர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.