எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: இளைஞர் படகுடன் கைது

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகு மூலம் 96 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்த முயன்ற படகையும் பறிமுதல் செய்தனர்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு
Updated On :4 நவம்பர் 2021, 2:37 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகு மூலம் 96 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்த முயன்ற படகையும் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் காலனி  கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்த இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் வியாழக்கிழமை மாலையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகை சோதனையிட்டனர். அதில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மூட்டைகளில் 96 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவைகளை பறிமுதல் செய்த காவலர்கள், மீனவர் காலனி பகுதி ராஜாங்கம் மகன் மணிகண்டன் (33) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.