இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

'தீவிரவாதியுடன் தொடர்பு' - கேஜரிவாலை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி

2017ல் தீவிரவாதி ஒருவரின் வீட்டில் அரவிந்த் கேஜரிவால் தங்கியிருந்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். 

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :16 பிப்ரவரி 2022, 10:07 am

DIN

2017ல் தீவிரவாதி ஒருவரின் வீட்டில் அரவிந்த் கேஜரிவால் தங்கியிருந்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். 

ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் பயணத்தின்போது மோகாவில் உள்ள ஒரு தீவிரவாதியின் வீட்டில் இரவு தங்கியதாக செய்திகள் வெளியாகின. அப்போது தேர்தல் நேரம் என்பதால் இது மிகவும் சர்ச்சையானது. 

இந்நிலையில் இதைக் குறிப்பிட்டு, பர்னாலாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'என்ன நடந்தாலும் நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து விடாதீர்கள். இதுவரை எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஒரு தீவிரவாதியின் வீட்டில் தங்கியதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ஒரு தீவிரவாதியின் வீட்டில் இருக்கும். 

பஞ்சாபிற்கு நிலையான அரசாங்கம் தேவை. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியே தொடர வேண்டும்' என்றார். 

பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.