2017ல் தீவிரவாதி ஒருவரின் வீட்டில் அரவிந்த் கேஜரிவால் தங்கியிருந்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் பயணத்தின்போது மோகாவில் உள்ள ஒரு தீவிரவாதியின் வீட்டில் இரவு தங்கியதாக செய்திகள் வெளியாகின. அப்போது தேர்தல் நேரம் என்பதால் இது மிகவும் சர்ச்சையானது.
இந்நிலையில் இதைக் குறிப்பிட்டு, பர்னாலாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'என்ன நடந்தாலும் நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து விடாதீர்கள். இதுவரை எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஒரு தீவிரவாதியின் வீட்டில் தங்கியதில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ஒரு தீவிரவாதியின் வீட்டில் இருக்கும்.
பஞ்சாபிற்கு நிலையான அரசாங்கம் தேவை. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியே தொடர வேண்டும்' என்றார்.
பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


