மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் 31.03.2024 அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 01.04.2024 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.
மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை பணத்தைத் திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாள்களில் பணம் திரும்ப செலுத்தப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துகிறது என்று தெரிவித்துள்ளது.