தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றதுடன் தொடக்கம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றதுடன் தொடக்கம்!

தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் வெகு விமர்சையாக நநடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக, பஞ்சமூா்த்திகளுடன் சந்திரசேகரா் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டுது.

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றதுடன் தொடக்கம்!
‘கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு முகாந்திரம் இல்லை’

பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த துணிகளை கொண்டு பிரமாண்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.

18 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com