வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் லாரி இடித்ததில் சேதம்:பக்தர்கள் அதிர்ச்சி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி

News image

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:09 am IST

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் திருக்கோயில் சமயபுரம் மாரியம்மன். இந்த திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோன்று சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் நுழைவு வாயில் முன்பு அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள், ஆட்டோ, லாரி, பொருள்களை ஏற்றிச் செல்வோர் நுழைவு வாயிலில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ள நுழைவு வாயிற் சுவர்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ள நுழைவு வாயிற் சுவர்

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சமயபுரத்திலிருந்து கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நுழைவு வாயிற் சுவர்களில் மோதியது. இதில் கோயிலின் நுழைவுச் சுவர் மற்றும் நுழைவு வாயிலின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் நுழைவு வாயில் சுவர் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளதால் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.