அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

மல்லி தொடர் நாயகியுடன் இணையும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்!

கண்மணி அன்புடன் என்ற புதிய தொடர் அறிவிப்பு.

News image

கண்மணி அன்புடன் தொடர் - Instagram

Updated On :16 ஆகஸ்ட் 2024, 3:46 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு கண்மணி அன்புடன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னோட்டக் காட்சியை பார்க்கும்போது இரு தோழிகளுக்கு இடையேயுள்ள நட்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

நவீன் வெற்றி

நவீன் வெற்றி

கண்மணி அன்புடன் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொடரில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் நவீன் வெற்றி மற்றும் மல்லி தொடரில் ரஞ்சிதா பாத்திரத்தில் நடித்த துஷிதா(கிரேசி தங்கவேல்) ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

நவீன் வெற்றி முன்னதாக நீலி, தேன்மொழி பி.ஏ., நாம் இருவர் நமக்கு இருவர், கண்ணே கலைமானே உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

துஷிதா

துஷிதா

நடிகை துஷிதா முன்னதாக திருமகள், சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இத்தொடரில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த தகவல் எதிர்வரும் நாள்களில் தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.