தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

ரஷியா: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு!

ரஷியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு இயற்கை சீற்றங்கள்

News image

நிலநடுக்கம் (கோப்புப்படம்) - DIN

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:26 am IST

ரஷியாவின் கிழக்கு கம்சாட்கா கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 90 கி.மீ. தொலைவில், பூமிக்கு 50 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலடுக்கத்தால் எந்தவித பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றும், இருப்பினும் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ரஷியாவின் கம்சட்காவில் சுமார் 181,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் ஷிவெலுச் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

ரஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தால் கம்சாட்கா மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.