6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!

புதுவையில் பெய்த கடுமையான மழை தொடர்பாக...

News image
வெள்ளத்தில் மிதக்கும் புதுவை.
Updated On :1 டிசம்பர் 2024, 7:51 am

DIN

ஃபென்ஜால் புயலால் பெய்த கடுமையான மழையின் காரணமாக, புதுச்சேரி நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது மற்றும் வீதிகளில் நீர் முழங்கால் அளவிற்கு உயர்ந்துள்ளது.

500 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ள நிலையில், கடல் நீரின் அதிக அழுத்தம் காரணமாக, வாய்க்கால்கள் வழியாக மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மின்சார விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர தகவல்களுக்கு, பொதுமக்கள் 1077 அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை 0413-2353850 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.