கொல்கத்தா: பாரம்பரிய சுற்றுலாவிற்கு தகுதிவாய்ந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகவும், இந்த அறிவிப்பு மாநிலத்தின் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்குவங்க சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், பாரம்பரியம், தேயிலை மற்றும் மதம் சார்ந்த சுற்றுலா தளங்களில் மாநில அரசினால் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேற்கு வங்கத்தில் பாரம்பரிய சுற்றுலா தளங்களை உருவாக்குவதில் மாநில அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறிய அவர், மதம் சார்ந்த சுற்றுலா தளங்களை முன்னேற்றுவதற்கு வழிப்பாட்டு தளங்களான தக்ஷினேஸ்வரர் கோயில் மற்றும் காளிகாட் கோயில் போன்ற இடங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திகாவில் கட்டப்பட்டு வரும் ஜெகனாத் கோயிலிம் விரைவில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்திலுள்ள ஒவ்வொரு இடத்தின் தனிச்சிறப்பையும் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் அந்தந்த சுற்றுலா தளங்களை சுற்றியிலும், ஆயிரக்கணக்கான உணவகங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் இந்திரானில் சென் கூறியதாவது:
சுமார் 2,489 சுற்றுலா விடுதிகள் மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 65 சதவிகித்திற்கும் மேல் வடக்கு வங்காளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனமழையால் தத்தளிக்கும் கேரளம்: 15 ஆன பலி, 7 பேர் மாயம்!

மேற்கு வங்கம்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா் கைது: முதல்வரை உளவு பாா்த்ததாக குற்றச்சாட்டு

‘பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்’ - மமதா சவால்!

திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



