ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ரஜினி வசூலை முறியடித்த விஜய் சேதுபதி!

சீனாவில் மகாராஜா திரைப்படம்...

News image
Updated On :3 டிசம்பர் 2024, 11:49 am IST

மகாராஜா திரைப்படம் சீனாவில் வசூலைக் குவித்து வருகிறது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது.

திரையரங்க வெளியீட்டில் ரூ.110 கோடியையும் ஓடிடியில் பரவலான கவனத்தையும் பெற்றது. முக்கியமாக, பாலிவுட்டில் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்புக் கிடைத்தது.

இதையும் படிக்க: விஜய் - 69 அப்டேட்!

சீனாவில் இப்படம் 40 ஆயிரம் திரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.29) வெளியானது. அங்கு, முதல் நாள் வசூலாக ரூ.10 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல் மூன்று நாள்களில் இப்படம் ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சீனாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 வசூலைக் (ரூ.22 கோடி) கடந்த தமிழ்ப்படம் என்கிற சாதனையை மகாராஜா அடைந்துள்ளது.

படத்தின் திரைக்கதை சீன ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.