ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.
ரோஜா தொடரில், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும், அவரது கணவர் அர்ஜுனாக ஷிபு சூர்யனும் நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்து நிலையில், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இத்தொடர் இடம் பெற்று இருந்தது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த நிலையில், ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரை சரிகம நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் முன்னோட்டக் காட்சி தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஜா முதல் பாகம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், 2-ம் பாகல் சரிகம யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



