கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலைகளில் சிதறி ஓடியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டதால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
லாரியில் இருந்து கீழே விழுந்த உருளைகளை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்து லாரியை சாலையில் இருந்து நிமிர்த்தி சாலை ஓரத்தில் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

சொகுசு பேருந்து - லாரி மோதி விபத்து

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



