குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கச்சு மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (டிச.23) காலை 10.44 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
முன்னதாக, கடந்த டிச.7 அன்று இதே கச்சு மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்க அபாயமுள்ள பகுதியான குஜராத் மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளில் 9 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு கச்சு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 பேர் பலியான நிலையில் 1.67 லட்சம் பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
மணிப்பூரில் இன்று 2 முறை நிலநடுக்கம்!

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


