தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலஸ்தீன மாணவி சுட்டுக்கொலை!

பாலஸ்தீன மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி..

News image
Updated On :29 டிசம்பர் 2024, 9:16 am

DIN

மேற்கு கரைப்பகுதியின் ஜெனின் நகரத்தில் பாலஸ்தீன மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜெனின் நகரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் போராளி குழுக்களுக்கு எதிராக பாலஸ்தீன அதிகாத்துவத்தின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (டிச.28) ஜெனினிலுள்ள தனது வீட்டில் தனது தாயாருடனும், இரண்டு குழந்தைகளுடனும் இருந்த ஊடகவியல் மாணவியான ஷாஸா அல்-ஸப்பாக் (வயது-22), மறைந்திருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலியானார்.

இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனப் பாதுகாப்புப் படையினர் தான் காரணம் எனப் பலியான மாணவியின் தாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, பாலஸ்தீனப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த மாணவி போராளி குழுவினரால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த நேரத்தில் எந்தவொரு போராளி குழுவும் அங்கு இல்லை எனவும் தங்களது பெண்ணை பாலஸ்தீனப் பாதுகாப்புப் படையினர்தான் வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீனப் பாதுகாப்பு படை பெரும்பாலும் இஸ்ரேலின் ஆதரவோடு அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதினால் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் அந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.