பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மஞ்சு வாரியரா இது? வைரலாகும் புதிய படத்தின் போஸ்டர்!

மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வைரலாகி வருகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2024, 4:51 pm IST

மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வைரலாகி வருகிறது.

தனது 17 வயதில் மலையாளத்தில் நடிகையாக 1995-இல் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். பின்னர் நடிகர் திலீப்பை 1998இல் திருமணம் செய்தார். அவரை 2015இல் விவகாரத்து செய்யும்வரை படத்தில் நடிக்காமல் இருந்தார்.

2015க்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் மஞ்சு வாரியருக்கு பிருத்விராஜுன் லூசிஃபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தமிழில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியின் வேட்டையில் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 4 படங்களி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதில் புட்டேஜ் எனும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்றிரவு வெளியானது. இதில் விஷாக் நாயரை கட்டியணைத்திருக்கும் படம் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் சைஜு ஸ்ரீதரன். கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் எடிட்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.