மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலமானார்: ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்

ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் காலமானார்

News image
ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்
Updated On :19 ஜனவரி 2024, 11:08 am

DIN


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடியும்  மூத்த தணிக்கையாளருமான சி.என். ஜெயச்சந்திரன் (92), இன்று (19.01.2024) காலை 8  மணியளவில் பெங்களூரில் காலமானார்.

பெங்களூரில் அவருடைய பேரன் வீட்டில் தங்கியிருந்த அவர், முதுமை காரணமாகக்  காலமானார். அவருடைய உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது.

சென்னை, அம்பத்தூர், திருவேங்கட நகரிலுள்ள இவருடைய சகோதரர்  கார்ல்  மார்க்ஸின் மகள் இல்லத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்  இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவர்  ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன். இவர் மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், வழக்கறிஞர் என்.டி. வானமாமலை போன்றோருடன் இணைந்து பணியாற்றியவர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இவரும் மறைந்த இந்திய கம்யூ. தலைவர் தா. பாண்டியனும்  வகுப்புத் தோழர்கள். மறைந்த கோபிச்செட்டிபாளையம் சி. சுப்பிரமணியமும் இவரும் இணைந்துதான் தென்னக ஆய்வு மையத்தைத் தொடக்கினர்.

ஜெயச்சந்திரனின் மறைவு பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் அதன்  இணைப்பு அமைப்புகளின் நீண்ட கால தணிக்கையாளராகப் பணியாற்றியவர். இளம் தணிக்கையாளர்களை உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயச்சந்திரனின் மறைவு பெரும் வேதனையளிக்கிறது. அவர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தணிக்கையாளர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்றும் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.