மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தங்கம் விலை மீண்டும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

News image

தங்கம் விலை புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

Updated On :10 ஜூலை 2024, 10:46 am IST

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.30 குறைந்து 6,770-க்கும், ஒரு பவுன் ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமையும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.10 குறைந்து 6,760-க்கும், ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.54,080-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை 50 காசு குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.99,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி வெள்ளி விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.