அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யக் கூடும்
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

புதுதில்லி: அடுத்த சில நாள்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிவிப்பில்,

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று கர்நாடகத்திலும், சனிக்கிழமை வரை மத்திய மகாராஷ்டிரத்திலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கு நாடு முழுவதும் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

மேலும் தில்லியில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்று புதன்கிழமை கனமழை பெய்யக் கூடும், நாளை முதல் அடுத்த 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com