அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும்: ‘இந்தியா’ கூட்டணி வேண்டுகோள்

தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் வலியுறுத்தினா்.

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்

Updated On :2 ஜூன் 2024, 2:39 pm

DIN

புதுதில்லி: தபால் வாக்குகளை முதலில் எண்ணி உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தில்லியில் தேர்தல் ஆணையர்களிடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.

நடந்து முடிந்த மக்களவைத்தோ்தலின் வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ள நிலையில்,

தில்லியில் தேர்தல் ஆணையர்களை ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, டி.ஆர்.பாலு, சீதாரம் யெச்சூரி, டி.ராஜா. நாசீர் ஹுசைன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளன்று விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.