சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத் துறை வைத்த கூண்டில் சனிக்கிழமை காலை சிக்கியது.

News image
தேவர்சோலை பகுதியில் வனத் துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை.
Updated On :8 ஜூன் 2024, 6:29 am

DIN

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வனத் துறை வைத்த கூண்டில் சனிக்கிழமை காலை சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதி தேவன் எஸ்டேட் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த நான்கு நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

கூண்டில் சிக்கியது சிறுத்தை.

கூண்டில் சிக்கியது சிறுத்தை.

இதையடுத்து, கடந்த புதன்கிழமை முதல் அந்தப் பகுதியில் தேடுதல் பணியை தொடங்கிய வனத்துறையினர், சிறுத்தை கிடைக்காத நிலையில் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கூண்டில் சிக்கியது சிறுத்தை.

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.