‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Published On :

சேலம்: மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் ஞாயிற்றுகிழமை தோறும் ஆடு, மாடுகள் விற்பனை செய்யபடுகிறது.

இந்த நிலையில், நாளை (ஜூன் 17)பக்ரீத் பண்டிகை என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் விற்கவும் இன்று(ஜூன் 16)நங்கவள்ளி சந்தைக்கு மக்கள் வருகை தந்தனர்.

இன்று காலை 6 மணிக்கு கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

நாளை பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.

மேலும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சந்தை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.