காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்!

துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

News image

கருடன் பட இயக்குநருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.

Updated On :24 ஜூன் 2024, 1:59 pm IST

துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்கியிருந்தனர்.

புதிய தோற்றத்தில் லெஜண்ட் சரவணன்.

புதிய தோற்றத்தில் லெஜண்ட் சரவணன்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணன்.

இந்த நிலையில், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்துள்ளார் துரை செந்தில் குமார்.

இப்படத்தில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்கிறார். லெஜண்ட் சரவணனின் தோற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, சசிகுமார், சூரி நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படம் நல்ல விமரிசனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.