சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விண்ணப்பிப்பதில் சிக்கல்! சர்வர் டவுன்!

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாதவாறு கடைசி நேரத்தில் சர்வர் டவுன் ஆனது பற்றி...
திணறும் விண்ணப்பதாரர்கள்...
திணறும் விண்ணப்பதாரர்கள்...

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.

முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 5 – செவ்வாய்க்கிழமை (மாலை 6 மணி) கடைசி நாள்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கிக் கிடப்பதாக விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியவில்லை என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய சூழலில், குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்க முடியுமா? விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அல்லது நேரம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் இளைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com