திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் !

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், வரும் ஜுன் 1 - ந் தேதி முதல் தொடங்க உள்ள 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

News image
Updated On :24 மே 2024, 7:51 pm IST

ஐசிசி 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுன் 1 -ந் தேதி முதல் ஜுன் 29 - ந் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜுன் 5 - ந் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், ஐசிசி 20 ஒவர் உலக கோப்பையின் வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.உலக கோப்பை போட்டி வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மேலும் ரவி சாஸ்திரி,ஸ்டீவ் ஸ்மித்,ஆரோன் பின்ச்,ரிக்கி பாண்டிங்,மேத்யூ ஹைடன் உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.