கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழாவுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

Updated On :1 நவம்பர் 2024, 7:15 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதி இரண்டு நாள்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,039 சதய விழா வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.

இந்த விழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை(நவ.1) காலை நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தல் கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவினை சதயகுழு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.