
பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதியில் திடீரென பெய்த மழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாக இருந்து நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீர்வரத்து திடீரென அதிகரித்து விநாடிக்கு 14,000 கன அடியாக தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க: யானைகள் தாக்கி இருவர் பலி! ஒருவர் காயம்!
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.