ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சென்னை: போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் கைது!

தனியார் கல்லூரி மாணவி உள்ளிட்ட 12 பேர் கைது.

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2024, 6:13 am

DIN

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 12 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகர் முழுவதும் கடந்த சில நாள்களாக போதைப்பொருள் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ள இடங்களில் காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஜெ.ஜெ. நகரில் போதைப்பொருள்கள் வைத்திருந்த தனியார் கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியார் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி உள்பட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தநிலையில், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, போதைப்பொருள்கள், வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.