தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

தனியாரின் சொத்துகளை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக...

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :5 நவம்பர் 2024, 1:10 pm IST

தனியாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசால் கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடிமக்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பொது நலனுக்காக கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று இன்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் , 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சட்டப்பிரிவு 39B-ல் உள்ளபடி சமூகத்தில் உள்ள குடிமக்களுக்கு சொந்தமான சொத்துகளை, பொது நலன் கருதி மாநிலங்கள் கையகப்படுத்த முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு தனிநபருக்கு சொந்தமான சொத்தை சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது என்றும், ஏனெனில் அந்த சொந்துகள் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதகாகவும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.