கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கோவை வடவள்ளி, பி.என்.புதூர், கே.என்.ஜி புதூர், சேரன் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளி, பி.என்.ஆர். நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் கான்கிரீட் கலவை மூலமாக சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர், கே.என்.ஜி.புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
இதையும் படிக்க | தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை
அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலம் வார்டு எண்.17-க்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்கன அடிப்படையில் இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் வழங்கப்படும் முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மத்திய மண்டலம், காந்திபுரம் நேரு வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையினை தலைமைச் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள்: மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிராமங்களில் கண்காணிப்பு கேமரா: பொதுமக்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தலைமைச் செயலகத்தில் விஜய்! தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



