டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

News image
கோவை கே.என்.ஜி.புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த தலைமைச் செயலாளர் முருகானந்தம்
Updated On :6 நவம்பர் 2024, 3:39 am

DIN

கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

கோவை வடவள்ளி, பி.என்.புதூர், கே.என்.ஜி புதூர், சேரன் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளி, பி.என்.ஆர். நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் கான்கிரீட் கலவை மூலமாக சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர், கே.என்.ஜி.புதூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலம் வார்டு எண்.17-க்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்கன அடிப்படையில் இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் வழங்கப்படும் முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மத்திய மண்டலம், காந்திபுரம் நேரு வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையினை தலைமைச் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.