இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெரிய புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் விசிக-வுக்கு போட்டியாளராக முடியாது: திருமாவளவன்

எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது

News image
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்.
Updated On :9 நவம்பர் 2024, 7:17 am

DIN

விழுப்புரம்: எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் திலிபன் தாய் ரானியம்மாள் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளாராக ஆக முடியாது. ஏனென்றால் நம்முடைய களம் முற்றிலும் மேலானது. இந்த களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது. இதை நம்மால் மட்டும்தான் செய்ய முடியும். நம்மால் மட்டும்தான் இப்படியொரு இயக்கத்தை நடத்த முடியும்.

மேலும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து யாரோ ஒருவர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் பெயரை பதிவிட்ட பின்பு தான் விடுதலைச் சிறுத்தைகள் பெயரை பதிவிடுகிரார்கள். எனவே நாம் இன்னும் விழுப்பாக இருப்போம். சமுக ஊடங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் நாம் அவரசப்பட்டு எதையும் பதிவிட்டுவிடக் கூடாது என கட்சியினருக்கு அறிவுரை வழங்கியவர், திருமாவளவன் சாரசரி அரசியல்வாதி அல்ல என்பதை காலம் சொல்லும். அதை புரிந்துகொள்வதற்கே இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றார்.

இந்த நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.