ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

News image

மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Updated On :22 நவம்பர் 2024, 4:53 am

DIN

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில் தாபா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மேட்டூர் மாதையன் குட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர் மேட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்த ஹோட்டலில் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழை அதிகாலை 5 மணியளவில் தாபா ஹோட்டல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு படை அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிரிட்ஜ், மின்விசிறி, டிவி,டேபிள் சேர்கள், சமையல் செய்யும் உபகரணங்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ஹோட்டலில் இருந்து ஆறு சமையல் எரிவாயு உருளைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக ? அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் தீ வைத்தனரா? என்பது குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாகவா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.