இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 முதல் அக்.18ஆம் தேதி வரை செயல்படாது!

சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டது.

News image
கலைஞர் பூங்கா - கோப்புப் படம்
Updated On :14 அக்டோபர் 2024, 3:50 pm

DIN

கனமழை அறிவிப்பு எதிரொலியை அடுத்து சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 முதல் அக். 18 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், பசுமை குகை, மர வீடு, நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், அருவி, இசை, பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றது.

பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கனமழை அறிவிப்பு எதிரொலி காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை செயல்படாது என தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.