தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிரம்: 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரத்தில் 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதைப் பற்றி...

News image
Updated On :4 ஏப்ரல் 2025, 11:03 am

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி, அகோலா, புல்தனா, வாஷிம் மற்றும் யவாட்மல் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 2001-ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரையிலான காலத்தில் சுமார் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியானதாக அமராவதி வருவாய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த அறிக்கையின்படி கடந்த 24 ஆண்டுகளில் அமராவதி - 5,395 (விவசாயிகள் பலி எண்ணிக்கை), அகோலா - 3,123, யவாத்மல் - 6,211, புல்தனா - 4,442 மற்றும் வாஷிம் - 2,048 விவசாயிகள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு (2025) ஜனவரியில் மட்டும் இந்த 5 மாவட்டங்களில் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் யவாத்மால் - 34, அமரவதி, அகோலா, புல்தானா மாவட்டங்களில் தலா 10 பேரும் மற்றும் வாஷிம் - 7 பேரும் தற்கொலையால் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையில் கடந்த 24 ஆண்டுகளில் தற்கொலை செய்து பலியான விவசாயிகளில் 9,970 வழக்குகள் அரசினால் வழங்கப்படும் இழப்பீடு பெறும் தகுதிவுள்ளதாகவும், 10,963 வழக்குகளில் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 319 வழக்குகள் தற்போது நிலுவையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு விதிமுறைகளின் படி கடன் சுமை மற்றும் பயிர்கள் நாசமானது ஆகிய காரணங்களினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.