மகாராஷ்டிரத்தில் கடந்த 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி, அகோலா, புல்தனா, வாஷிம் மற்றும் யவாட்மல் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 2001-ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரையிலான காலத்தில் சுமார் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியானதாக அமராவதி வருவாய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அறிக்கையின்படி கடந்த 24 ஆண்டுகளில் அமராவதி - 5,395 (விவசாயிகள் பலி எண்ணிக்கை), அகோலா - 3,123, யவாத்மல் - 6,211, புல்தனா - 4,442 மற்றும் வாஷிம் - 2,048 விவசாயிகள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தாண்டு (2025) ஜனவரியில் மட்டும் இந்த 5 மாவட்டங்களில் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் யவாத்மால் - 34, அமரவதி, அகோலா, புல்தானா மாவட்டங்களில் தலா 10 பேரும் மற்றும் வாஷிம் - 7 பேரும் தற்கொலையால் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையில் கடந்த 24 ஆண்டுகளில் தற்கொலை செய்து பலியான விவசாயிகளில் 9,970 வழக்குகள் அரசினால் வழங்கப்படும் இழப்பீடு பெறும் தகுதிவுள்ளதாகவும், 10,963 வழக்குகளில் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 319 வழக்குகள் தற்போது நிலுவையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு விதிமுறைகளின் படி கடன் சுமை மற்றும் பயிர்கள் நாசமானது ஆகிய காரணங்களினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கணவா் இறந்து துயரத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மோகனூா் கடமடையை சென்றடையாத தண்ணீா்; விவசாயிகள் கவலை
ஆலங்குளம் அருகே இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்



