விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

செல்போனில் தலாக் கூறிய நபர் மீது வழக்கு!

கேரளாவில் செல்போன் மூலம் தலாக் கூறிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2025, 11:24 am IST

கேரளத்தில் செல்போன் மூலம் தலாக் கூறியதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தின் கொண்டோட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து சுமார் ஒரு ஆண்டாக தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமையால் இவர் பிரிந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுடைய தந்தையின் செல்போன் மூலம் பேசிய அவரது கணவர், மூன்று முறை தலாக் கூறி தங்களுடைய திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது கணவன் மீது இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த நபர் தலாக் கூறிய அழைப்பானது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.