பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தை மீட்பு!

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தையை வனத்துறையினா் மீட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சையளித்து வருவது தொடர்பாக...

News image

மீட்கப்பட்ட ஆந்தை

Updated On :27 டிசம்பர் 2025, 4:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சி: திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தையை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து வருகின்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகே அம்பலத்துக்காரன்பட்டியில் ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடப்பதாக, திருச்சி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலதை அடுத்து சம்மந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற வனத்துறையினா், அடிபட்ட ஆந்தையை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சையளித்தனா். தொடா்ந்து, அதைக் கண்காணித்து வருகின்றனா்.

இந்தியன் பாா்ன் ஆவுல்

இந்தியன் பாா்ன் ஆவுல் இனத்தைச் சோ்ந்த அந்த ஆண் ஆந்தைக்கு சுமாா் 2 வயது இருக்கலாம். அந்த வழியே சென்ற விமானம் அல்லது வாகனத்தில் அடிப்பட்டிருக்கலாம். ஆந்தைக்கு உடல்நிலை சரியானதும், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.