இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காசியாபாத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து

காசியாபாத் அருகே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்ததால் லாரியில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து

News image
காசியாபாத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து
Updated On :1 பிப்ரவரி 2025, 3:38 am

DIN

காசியாபாத்: காசியாபாத் அருகே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்ததால் லாரியில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிவாயு உருளைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் லாரியை நெருங்க முடியவில்லை.

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி தில்லி-வஜிராபாத் சாலை போபுரா சௌக் அருகே திடீரென தீப்பிடித்ததை அடுத்து லாரியில் இருந்து எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பயங்கர சத்தத்துடன் எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்த நிலையில், சுற்றுப்பகுதியில் இருந்த பதற்றத்துடன் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களால் தீப்பற்றி எரியும் லாரியை நெருங்க முடியவில்லை. எரிவாயு உருளைகள் வெடிக்கும் சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்பதாக தீயணைப்புத்துறை அதிகாரி ராகுல் குமார் கூறினார்.

லாரியில் 100-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள், காயங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு வீடு மற்றும் ஒரு கிடங்கு சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.