பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவாவில் போதைப் பொருள் வைத்திருந்த ஜெர்மன் நாட்டுக்காரர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் சுற்றுலா விசா மூலம் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செபாஸ்தியன் ஹெஸ்லர் (வயது 45) என்ற நபர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் நேற்று (பிப்.3) இரவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரிடமிருந்து எல்.எஸ்.டி, 2 கிலோ அளவிலான கஞ்சா, கெட்டமைன் பவுடர், கெட்டமைன் லிக்விட் ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.23,95,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்னி சென்குப்தா என்ற நபர் ரூ.7.5 லட்சம் அளவிலான போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த ஒரு வாரக்காலமாக செபாஸ்தியனை காவல் துறையினர் பின் தொடர்ந்து, தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.