மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிருப்பு கட்டடத்திலுள்ள ஓர் வீட்டில் இன்று (பிப்.9) மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 4 தீயணைப்பு வாகனங்களின் மூலம் அந்த தீயை அணைத்தனர்.
இதையும் படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் பிறந்த நாளில் அமைதிப் பேரணி!
இதனைத் தொடர்ந்து, இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் அதை கண்டறிய அம்மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கோவிந்த்புரி கட்டடத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு: இருவா் படுகாயம்

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி







