மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம்

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 10:11 am

DIN

 சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் சமூகநலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 250 மகளிருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநா் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கேற்ப மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான தமிழக அரசின் அரசிதழில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாா் கூறியிருப்பதாவது:

சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பிங்க் ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும் ஓட்டுநராகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் ‘பிங்க்’ நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.

அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயா் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வரும் மாா்ச் மாதத்துக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.