உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நிறைவடைகிறது பாக்கியலட்சுமி தொடர்!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைவது தொடர்பாக....

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடைகிறது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறை ரசிகர்களும் விரும்பிப் பார்க்கும் தொடராக பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கோபி பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டப் பதிவில், “பாக்கியலட்சிமி என்ற பொதுத்தேர்வு முடியும் நேரம் வந்துவிட்டது. நான் தேர்ச்சியடைந்தேனா? இல்லை தோல்வியடைந்தேனா? என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கின்றது. மனதிலும் உடலிலும் சோர்வடைந்து விட்டேன்.

இருப்பினும் முயற்சி தொடரும். நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும். நன்றி. வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளப் பதிவின்படி பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது. இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.