பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப் போட்டியாளரைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது.

இதில், அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் முதல் நபராக இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதிப் பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில், இந்த வாரமும் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணவ் வெளியேறினார். இன்றைய நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் மஞ்சரி வெளியேறுவார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் 14-வது வாரத்தில் அதாவது, வரும் வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படவுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.

ஒரு லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக தொகை உயர்த்தப்படும். இதில் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார், வார இறுதியில் 2 பேர் வெளியேற்றப்படுவார்.

இந்த நிலையில், இறுதி வாரத்துக்குள் நுழையும் 5 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.