பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நலமாக இருக்கிறேன்... எம்.பி. சு.வெங்கடேசன்

தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

News image

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன்

Updated On :5 ஜனவரி 2025, 5:36 pm

DIN

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சிக்காக சென்ற போது, அவரது இடது கையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கட்சியினருக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அவா் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.தொடா்ந்து எம்.பி. வெங்கடேசனுக்கு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், மருத்துவக் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டிருந்தாா்.

இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மருத்துவமனையிலிருந்து அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றாா்.

முன்னதாக மருத்துவமனையில் வெங்கடேசன் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசி நலம் விசாரித்தாா். மாநில வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, எம்.எல்.ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஆட்சியா் சி.பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.செ.புஷ்பராஜ் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனா்.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நலமாக இருக்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.

இந்த செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கௌதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்எல்ஏ மற்றும் விழுப்புரம் ஆட்சியர் தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.