இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

யேமன்: வெடி விபத்தில் 15 பேர் பலி! 67 பேர் படுகாயம்!

யேமனில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தைப் பற்றி..

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2025, 11:51 am

DIN

யேமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியாகினர்.

அந்நாட்டின், பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியானதுடன் சுமார் 67 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹௌதி போராளிக் குழுவின் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதில் 40 பேரது நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் காணமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்தபோது பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடன் அப்பகுதியில் தீ கொளுந்துவிட்டு எறிவதும், வானமெங்கும் கருநிற புகை சூழ்ந்திருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த மத்திய யேமன் மாகாணத்தை ஈரான் துணையுடைய ஹௌதி போராளி குழு கட்டுப்படுத்தி வருகின்றது. இந்த போராளி குழு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்நாட்டு அரசுடன் உள்நாட்டு போர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.