மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி

தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

News image

காவிரி கரையில் ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் - ஒரே ராகத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On :18 ஜனவரி 2025, 5:24 am

DIN

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழாவின் கடைசி நாளான இன்று பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவேரி கரையில் சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 14 ஆம் தேதி மாலை ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழா தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாடெங்கும் உள்ள பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்னையையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலுக்கு வந்தனர்.

அங்கு தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை காலை 9 மணிக்கு துவங்கியது.

தியாகராஜரின் முத்தான ஐந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் - ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, ஓ.எஸ்.அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.